நீ வெற்றி பெறுவாய்!

sai18

தினத்தியானம் 7
நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது. பாபாவினை முழுமையாக நம்பு என்று சொல்லவும் சத்சரித்திரம் 29:11
நீ வெற்றி பெறுவாய்!
மும்பையின் புறநகர்ப் பகுதியான பாந்த்ரா என்ற நகரத்தில் ரகுநாத் ராவ் தெண்டுல்கர் என்ற சாயி பக்தரும், அவரது மனைவி சாவித்ரி, மகன்கள் அனைவரும் சாயி பக்தர்கள்.
மூத்த மகன் பாபு மருத்துவம் படித்துவந்தான். தேர்ச்சி பெறவேண்டும் என்பது அவனது லட்சியம். ஆனால் ஜோதிடரை அரூகி, தேர்ச்சி பெறுவேனா என்று கேட்டான்.
ஜோதிடர் பாபுவின் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் அமர்ந்திருந்த இடம் ஆகியவற்றைப் பார்த்து, அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவாய், இந்த ஆண்டு கிரக நிலை சரியில்லை என்று கூறிவிட்டார். சிரமப்பட்டு படித்தது எல்லாம் பயனின்றிப் போய்விடப்போகிறது என்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன என்று பாபு மனம் உடைந்தான்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பாபுவின் தாயாரான சாவித்ரி, க்ஷPரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தபோது, பாபாவின் பாதங்களில் தலை வைத்து, ஜோதிடர் சொன்ன விக்ஷயங்களை சொன்னாள்.
இதைக் கேட்டு் “நான் சொல்வதை மட்டுமே அவனை செய்யச் சொல்லுங்கள். ஜாதகத்தை சுருட்டி மூலையில் வைத்துவிட்டு, அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள். வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா என்று பையனிடம் சொல்லவும். பையனிடம் நீ வெற்றி பெறுவாய், சோர்வு வேண்டா, அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது, பாபாவை முழுமையாக நம்பு என்று சொல்லவும்” எனக் கூறி அனுப்பினார்.
பாபாவே சொல்லிவிட்டார் என்ற சந்தோக்ஷத்தில் பையன் தேர்வு எழுதச் சென்றான். கேள்விகள் சுலபமாக இருந்தன. நன்றாக எழுதிவிட்டான். ஆனால் வாய்வழியாக கேட்கப்படும் தேர்வுக்குப்போக மட்டும் பயம். இதனால் தேர்வுக்குப் போகாமல் இருந்துவிட்டான்.
தேர்வு நடத்திய அதிகாரிக்கு பாபு வராமல் போனது ஆச்சரியமாக இருந்தது. பாபுவின் நண்பர் ஒருவரை அழைத்து, பாபு தேர்ச்சி பெற்றுவிட்ட விக்ஷயத்தைச் சொல்லி, வாய் வழி தேர்வுக்கு வராமல் நின்றுவிட்ட தற்கான காரணத்தைக் கேட்டு, அதில் கலந்து கொள்ளுமாறு சொல்லிஅனுப்பினார்.
நண்பர் வந்து சொன்னதும், அதிக சந்தோக்ஷம் அடைந்த பாபு, தாமதிக்காமல் வாய் வழித் தேர்வில் கலந்துகொண்டு, அந்த ஆண்டு வெற்றி பெற்றான்.
ஆகவே, என் அருமை குழந்தையே!
நீ பாபாவின் மீது நம்பிக்கை வைத்து, சந்தேகப்படாமல் தேர்வை எழுது. பாபா வெற்றி தருவார். எழுதிவிட்ட தேர்வு முடிவைப் பற்றி கலக்கப்பட்டுக் கொண்டிருக்காதே. பாபா பார்த்துக்கொள்வார்.
அதற்காகத்தானே அவர் உனது இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். உனது வேலை அடுத்த தேர்வுக்குத் தயாராவது மட்டும்தானே தவிர, பயப்படுவது அல்ல. இந்த சரித்திர வார்த்தைகள் பள்ளிக்கூட தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என நினைத்துக் கொள்ளாதீர்கள், வாழ்க்கை என்ற பாடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சோதனை என்ற பரீட்சைக்கும் பொருந்தும்.
சோதனை வரும்போது மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் எதிர்கொள்ளுங்கள். வருவது வரட்டும் என நினையுங்கள். பாபா பார்த்துக்கொள்வார். அவர் மீது முழுமையான நம்பிக்கையை மட்டும் வையங்கள். அனைத்தும் சுபமாக, சுகமாக முடியும்.
பிரார்த்தனை
சமர்த்த சத்குருவே, தேர்வுக்காகப் படிக்கிற இந்த வேளையில் அனைத்தையும் நினைவில் நிறுத்த, படித்தவை தேர்வில் வந்து, நான் நல்லமுறையில் எழுதி தேர்ச்சி பெற துணையிருக்குமாறு உம்மிடம் வேண்டிக் கொள்கிறோம். அருள் செய்வீராக.

உடனே சீரடிக்கு வாரும்!

baba2

தினத்தியானம் 6

பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

(அத்: 30!114)

உடனே சீரடிக்கு வாரும்!

சத்சரித்திரம் முப்பதாவது அத்தியாயம் 114 வசனத்தில், பாபாவினுடைய சித்தம் அதாவது மனவிருப்பம் பற்றி எழுதப்பட்டுள்ளது. பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வது, அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும், ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றி வைப்பது. இதுதான் பாபாவின் விருப்பம். வேண்டிக்கொண்டதுமே உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாக ஆரம்பிக்கும். ஆனால், உங்கள் தேவைககளைப் பெறுவதற்கு ஒருமுறையாவது நீங்கள் சீரடிக்குப் போய் வரவேண்டும். சீரடிக்குச் சென்று திரும்பி வந்தால் ஒரு சிறப்பானத் துவக்கம் நிச்சயமாக ஏற்படும்.

நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ், அவரது மகள் ரேகாவுடன் என்னுடன் சீரடிக்கு வந்தார்கள். தொழில் செய்து, சிலரிடம் சிக்கிக் கொண்ட பணத்தை திரும்பப் பெறமுடியாமல் பணக்கஷ்டத்துடன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார் ரமேஷ்.

என்னோடு வரும்போது, ”நீங்கள் சீரடிக்குச்சென்று பாபா அற்புதத்தைப் பெற விரும்பினால், அவர் எனக்கு உதவி செய்வார் என ஆழமாக நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை நிச்சயம் நமக்கு மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்!” எனக் கூறினேன்.

எல்லோரும் எனது வார்த்தையை ஏற்றுக்கொள்வார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், யாருடைய கஷ்ட காலங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ, யாருக்கு பாபாவின் ஆசீர்வாதம் பலன் தரவேண்டும் என அவரால் முடிவு செய்யப்பட்டிருக்கிறதோ அவர் நிச்சயமாக என் வார்த்தையை ஏற்றுக்கொள்வார் என்பது எனக்குத் தெரியும்.

பூனா ரயில் நிலையத்திற்கு வெளியே எங்களுக்காகக் காத்திருந்த பேருந்தில் நள்ளிரவு 12 மணி நேரத்திலும் இதைத்தான் வலியுறுத்தினேன். அப்போது ரமேஷ்: ”பதினெட்டு ஆண்டுகளாக வராத பதினெட்டு லட்ச ரூபாயில், பாதியளவு தொகை என் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வந்துள்ளது” என்றார்.

சீரடிக்கு வந்து தான் விருப்பங்கள் நிறைவேற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குள் தந்து விடுவதுதான் சாயி பாபாவின் லட்சியம். தனது பக்தர்கள் தன்னிடம் வேண்டிக் கொண்ட பிறகு அவர்களைக் காக்க வைக்க அவரால் முடியாது.

ஆகவே, அவர்கள் வேண்டிக்கொண்டதும் பலன் தர ஆரம்பித்து விடுகிறார். ரமேஷ் சீரடிக்குள் கால் பதித்த அன்று, மொத்த தொகையில் 75 சதவிகிதம் அளிக்கப்பட்டதாகத்தகவல் வந்தது. மிகவும் உற்சாகமாகிவிட்டார்.

சனி தோக்ஷ நிவர்த்தி யாகம் செய்தபோது, வன்னி சமித்துகளை ரமேஷ்தான் ஏற்பாடு செய்து தந்தார். இப்போது தீவிர ஆன்மீகவாதியாகி விட்டார்.

சாய் ராம், நான் எவ்வளவோ முறை வேண்டுதல் செய்திருக்கிறேன், உங்களோடும் சீரடி வந்துள்ளேன், ஆனால் என் வேண்டுதல்கள் ஏன் கேட்கப்பட வில்லை எனக் கேட்பாரும் இருப்பார்கள் அல்லவா?

இறைவன் கொடுக்கிறான், கர்ம வினை தடுக்கிறது என நான் அடிக்கடி கூறுவேனே, அது தான் உங்கள் விக்ஷயத்திலும் நடந்துவருகிறது. கர்ம வினையின் தாக்கம் பொடிப்பொடியாக தீவிரமாகப் பிரார்த்தனை செய்யவேண்டும்.

தரிசனத்திற்கு அழைக்கிறார்

பாபாவின் அனுமதியில்லாமல் யாரும் சீரடியில் கால் வைத்துவிட முடியாது. அவரது அனுமதி பெற்றவர்கள் செல்வதை யாரும் தடுக்கவும் முடியாது. போகும் வழியிலேயே அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, பிரச்சினைகளை, மன வருத்தங்களை உண்டாக்கி அழைத்துச் சென்று, முழுமையான நிவாரணத்தை அளிப்பார்.

சீட் கிடைக்காது, சரியான பராமரிப்பு கிடைக்காது, பேருந்தில் இடம் கிடைக்காது, தரிசனத்தின் போது பிறர் இடிப்பார்கள்.. இப்படியெல்லாம் பல தொல்லைகள் வரும்போது நாம் எரிச்சலடைந்து விடுவோம். இது தவறானது. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விக்ஷயங்களைக் கொடுத்து பாபா நமது பாவங்களை பாதி வழியிலேயே விலக்குகிறார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டால்,நடக்கிற அனைத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.

பாபா கூப்பிட்டு நாம் சென்றுவந்த பிறகு, அவரது நினைவிலேயே இருப்போமானால், வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

பிரார்த்தனை

சமர்த்த குருவே, உங்களை தரிசிக்க நான் சீரடிக்கு வருகிறேன். எனது கஷ்டங்கள்அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து விடுவீராக. இன்னல் சூழ்ந்த நிலையை மாற்றி ஆசீர்வதிப்பீராக.

குழந்தை பிறக்கும்!

foursai

தினத்தியானம் 5
”இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்” (அத் ; 48)


குழந்தை பிறக்கும்!


சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கோட் என்ற ஊரைச் சேர்ந்தவர் சபட்ணேகர். ஒரு வக்கீல்.
திருமணம் நடந்து பத்தாண்டுகள் கழித்தபிறகு. அவரது மகன் திடீரென காலமான பிறகு, வாழ்க்கையில் நிம்மதியை இழந்த அவர், பல புனிதத்தலங்களுக்குப் போய் வந்தார். அப்படியும் மனதிற்கு சமாதானம் கிடைக்கவில்லை.
சீரடிக்கு வந்தார். பாபாவோ ”வெளியே போ” என விரட்டிவிட்டார். மனம் நொந்து திரும்பிய சபட்ணேகர், மறு ஆண்டும் வந்தார். அப்போதும் பாபா ”வெளியே போள” என விரட்டினார். இதனால் அவர் போக்கிடம் இல்லாமல் கலங்கினார்.
ஒரு நாள் அவரது மனைவிக்கு ஒரு கனவு. நீர் எடுக்க கிணற்றுக்குச் செல்கிறாள், அங்கே வேப்ப மரத்தடியில் ஓர் துறவி அமர்ந்துகொண்டு,இவரைப்பார்த்ததும், ”தாயே எதற்கு ஆயாசம்? நான் நிரப்பித் தருகிறேன்” எனக் கேட்கிறார். அவரைப் பார்த்து பயந்து ஓடி வந்த போதும், அந்தத் துறவி, இவளை தொடர்ந்து துரத்துவது போல கனவு கண்டாள்.
கனவைப் பற்றி கணவரிடம் சொன்னபோது, ”நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது” என்று கூறி, பாபாவிடம் மீண்டும் சீரடிக்கு வந்தார். இப்போதும் பாபா, “வெளியே போ” என்றுதான் சொன்னார். இந்த முறை சபட்ணேகர் போகவில்லை.
பாபாவின் பாதங்களின் மீது தலையை வைத்து, அவரது பாதங்களை மெதுவாக வருடிக் கொடுத்தார். தாயன்பு மிக்க பாபா, அவரை ஆசீர்வதித்து, ”இறந்த குழந்தைக்கு வருந்தாதே! அதை மீண்டும் இதே கருப்பையில் வைக்கிறேன் இப்பாதங்கள் மிகவும் தொன்மையானவை, புனிதமானவை. இப்போது உனக்குக் கவலையில்லை. என் மீது முழு நம்பிக்கையையும் வை. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய்” என்றார்.
சபட்ணேகர் சீரடியில் தங்கி தினமும் பாபாவை தொழுவார். அடிக்கடி நமஸ்காரம் செய்துகொண்டே இருப்பார். இதை கவனித்த பாபா, “நீ ஏன் அடிக்கடி வணங்குகிறாய். பணிவுடனும் அன்புடனும் செய்யும் ஒரு நமஸ்காரமே போதும்!” என்றார்.
அவர்கள் விடைபெறும்போது, ஒரு தேங்காயை எடுத்துக் கொடுத்து, “இதை உன் மனவியின் சேலை முந்தானையில் போட்டுவிட்டு எவ்விதக் கவலையும் படாமல் சவுகரியமாகப் போய் வா!” என ஆசீர்வதித்தார். அவருக்கு அடுத்த ஆண்டே முரளிதரன் என்ற பெயருடைய மகன் பிறந்தான்.
சபட்ணேகர் சாயி பக்தியோடு வாழ்ந்தார். பாபா, வெளியே போ என அதட்டி விரட்டியது அவரையல்ல, அவருக்குள் இருந்த கவலையை, மன இறுக்கத்தை, கர்மாவை, அவநம்பிக்கையை. நீங்கள் நம்பிக்கையோடு பாபாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிக் கொண்டதில் உறுதியாக நில்லுங்கள். நிச்சயமாக உங்களுக்குக் குழந்தைப்பிறக்கும். புதிய தேவைகள், வசதி வாய்ப்புகள் போன்ற அனைத்தும் உருவாகிக் கிடைக்கும்.
பிரார்த்தனை
எங்கள் மீது எப்போதும் அன்பு கொண்டுள்ள சமர்த்த கடவுளான சாயி பாபாவே, உங்கள் திருவடித்தாமரைகளை வணங்குகிறோம்.
எங்களுடைய பாரங்கள் அனைத்தையும் உங்கள் மீது இறக்கிவைக்கிறோம். தேற்றுவார் இல்லாததாலும், மருத்துவர்கள் கைவிட்டதாலும், குழந்தைப்பேறு மிகவும் கடினமானதாக இருப்பதாலும் நாங்கள் குழம்பியிருந்தோம். இதனால் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதில் சிரமமாக இருந்தது. எங்கள் சிரமத்தைப்போக்கி, குழந்தை வரம் அருளவேண்டும் எனப்பிரார்த்திக்கிறோம். அருள்வீராக.

இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள்!

a9fae-img_0450

தினத்தியானம் 4

” இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.

இது சாதாரண மசூதி அன்று. ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.

சாயி சத்சரித்திரத்திலிருந்து

இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள்!

நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த மாலே காங்வ் ஊரைச்சேர்ந்த டாக்டர் முல்கி என்பவரின் அண்ணன் மகன், விலா எலும்பில் புரையோடிய ரணம் இருந்தது. முல்கி மிகப் பெரிய அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தும், அவனை காப்பாற்ற இயலாத நிலையில் இருந்தார்.

சிகிச்சைகளும், வழிபாடுகளும் பலன் தராத நிலையில் செய்வது அறியாமல் திகைத்தார்கள். அந்த நேரத்தில் ”சீரடியில் ஒரு முஸ்லிம் மகான் இருக்கிறார். அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை நிவர்த்தியாக்குகிறது. அவரது கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணம் அடைகின்றன” என்று டாக்டர் கேள்விப்பட்டார்.

இதை தன் அண்ணனிடம் சொன்ன போது, “பாபாவின் பாதங்களை வணங்குவதற்காகப்போவோம். கடைசி முயற்சியையும் செய்து பார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்” என முடிவெடுத்து, சீரடிக்கு வந்தார்கள். பிள்ளையைப் பெற்றவர்கள் பாபாவைப் பார்த்த மாத்திரத்தில் துக்கத்தால் மனம் உடைந்து கதறினார்கள்.

”ஓ! சமர்த்த சாயி! மகன் படும் வேதனையையும், அனுபவிக்கிற துக்கத்தையும் பார்க்க சகிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியவில்லை. நாங்கள் இவனுக்கு சிகிச்சை செய்து களைத்து விட்டோம். உங்கள் மகிமையைக்கேள்விப்பட்டு இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். முழுமையாக உங்களை சரணடைகிறோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய நோயைப்போக்குங்கள், இவனது உயிரை தானமாக எங்களுக்கு தருவீர்களாக” என்று வேண்டினார்கள்.

பக்தன் அழுதால் தாங்காத கருணை உள்ளம் படைத்த வரான சாயிநாதன், ஆறுதல் கூறினார்: ” இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்க்கதி என்கிற கெடுநிலையை யுகம் முடியும்வரை அடைய மாட்டார்! இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துச் சென்று காயத்தின் மீது தடவுங்கள். எட்டு நாட்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள்.

இது சாதாரண மசூதி அன்று. ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் கால் எடுத்து வைத்தவர் உடனே சேமத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப்பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்.

இங்கு வந்தவர் நிவாரணம் பெற வில்லை என்பது, சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களிலும் நடக்காத விக்ஷயம். உம் காரியம் கைகூடும் என்பதை அறிவீர்களாக” என்று வாக்குறுதி அளித்தார்.

பையனை தன் எதிரில் உட்கார வைக்கச் சொன்னார். அவனது தலையை அன்போடு வருடிக்கொடுத்தார். கால்களை தடவி விட்டார். அன்போடு பார்த்தார். சாயி தரிசனம் உடலில் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தந்த உதி எட்டு நாட்களில் கொடிய காயத்தை ஆற்றியது.

அவர்கள் நான்கு நாட்கள் சீரடியில் தங்கி பாபாவை தரிசனம் செய்து வீடு திரும்பிச் சென்றார்கள். எப்படிப்பட்ட நோயையும் உதி குணமாக்கும் அற்புதம் பாபாவின் அருட்பார்வைக்கு உண்டு.

பிரார்த்தனை

சமர்த்த சாயி நாத குருவே!

உங்கள் குழந்தையான நாங்கள் படும் பாட்டை அறிந்து தயவு கூர்ந்து விரைவாக எங்கள் நோயை போக்கியருள வேண்டும் எனப்பிரார்த்தனை செய்கிறோம்.

உங்கள் உதியால் எங்களுக்கு விரைந்து தீர்வு தருவீராக.

கவலைப்படவேண்டாம்!

25125

தினத் தியானம் 3

”மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப் பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்”                                         அத்: 22

கவலைப்படவேண்டாம்!

கோபர்காங்வ் தாலுகாவில் கொராலே என்ற கிராமத்தைச் சேர்ந்த அமீர் சக்கர் என்ற ஒரு தரகர், தனது முடக்குவாத நோயைத் தீர்க்குமாறு பாபாவிடம் முறையிட்டார்.

அவருக்கு உடனடியாக நிவாரணம் அளிக்காமல், சாவடியில் தங்குமாறு பாபா கூறினார். பாபாவின் சாவடி மிகப் பழையது. மேற்கூரையும், கீழ்த்தளமும் சிதிலம் அடைந்திருந்தது.

விரிசல்கள் நிறைந்து எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பது போன்ற அந்தக் கட்டிடத்தில் தேள்களும்,ஓணான் போன்ற ஜந்துக்களும் சர்வ சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்தன.

போதாக் குறைக்கு குஷ்டரோகிகள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எச்சில் இலைகள் அந்தப் பகுதியில் வீசப்பட்டதால் நாய்கள் வேறு இருந்தன. சாவடியின் பின்பகுதியில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள்

இருந்தன. அது மட்டுமல்ல, அது மழைக்காலம். கூரையிலிருந்து மழைநீர் ஒழுகியது. தரை முழுவதும் ஈரம் தேங்கி ஓதம் ஏற்பட்டிருந்தது. இவற்றினூடே கடுமையான குளிர்காற்று வீசியது.

இந்த இடத்தில் எப்படி தங்குவது என அமீருக்கு கவலையாக இருந்தது. அதைப் புரிந்துகொண்ட பாபா அவரிடம், “மழை பெய்யலாம், இடம் ஓதமாக இருக்கலாம், தரையானது மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால் நீர் அதைப்பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர். சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்!” என்று கூறினார்.

அந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடையாது. தரிசனத்திற்குக் கூட அனுமதியில்லை. சக்கர் ஒன்பது மாதங்கள் வரையில் அந்த சாவடியில் தங்கியிருந்தார். குளிர் காற்றில் மூட்டுகள் விறைத்துக் கொண்டன. படுத்த படுக்கையாக இருந்து துன்பப்பட நேரிட்டது.

சாவடியில் பாபா ஒருநாள் விட்டு ஒருநாள் படுத்துக்கொள்வார். பாபாவுக்கும் அமீருக்கும் இடையே ஒரு மரப்பலகையிலான தடுப்புக் கதவு மட்டுமே இருக்கும். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொள்வார்கள்.

இன்று குணமாகும், நாளைக்குக் குணமாகும் என எதிர்பார்த்த அமீர்சக்கருக்கு வியாதி குணமானதாக தெரியவில்லை. மாறாக சாவடி என்கிற சிறையில் அடைபட்டது போன்ற நிலை தோன்றியது.

இங்கிருந்து வேறு எங்கேனும் ஓடிப் போக வேண்டும் என்று நினைத்தவராக, பாபாவிடம் சொல்லாமல் கோபர் காங்வ் என்ற இடத்திற்கு ஓடிச்சென்றார். அன்றைய இரவைக் கழிக்க அங்கிருந்த ஒரு தரும சத்திரத்தில் தங்கினார்.

தர்ம சத்திரத்தில் தாகத்தால் தவித்த ஒரு பக்கீர், “தண்ணீர் தண்ணீர்” என கேட்பதைப் பார்த்து, பரிதாபப்பட்டு அவருக்கு நீர் கொடுத்தார். அதை அருந்தியவுடனே, அந்த பக்கீர் இறந்து போனார்.

அக்கம் பக்கம் யாருமில்லை. தன் மீது கொலைப்பழி விழும் என அமீர் பயந்தார். விடிந்தால் பக்கீரின் மரணம் பற்றி விசாரணை நடக்கும். அமீர் கைது செய்யப்படுவார், உண்மையைச் சொன்னா லும் நீதி மன்றம் அதை கேட்கப்போவதில்லை.

நான்தான் நேரடி காரணம் என பிறர் குற்றம் சொல்வார்கள். உண்மையான காரணம் தெரிய வரும் வரையில் தண்டனை அனுபவித்தாக வேண்டும்.

“இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி சீரடிக்கு கொண்டு போய் சேருங்கள் பாபா. இனி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை விட்டுப் போக மாட்டேன்” என்று பிரார்த்தனை செய்தார்.

சாயி பெயரை ஜெபம் செய்தவாறே சீரடியை வந்து அடைந்தார். அவரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் அவருக்கு விடுதலையளித்தன. விரைவில் அவர் நோயிலிருந்து குணமானார்.

பாபாவிடம் வந்தவுடனே உங்கள் வேண்டுதல் அனைத்தும் நடந்துவிடும் என்ற நம்பிக்கை வருகிறது. ஆனால், நடக்கமாட்டேன் என்கிறது.

இப்படி நினைப்பவரா நீங்கள்?

கஷ்ட நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறான் என்பதை நிதர்சனமாகத் தெரிந்துகொள்ளுங்கள். இறைவன் உங்களோடு தங்கியிருக்கிற இந்த நிலையில், நீங்கள் கஷ்டப்படுவதை பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் காத்திருங்கள்.

உங்களுக்குத் தேவை பொறுமை. நம்பிக்கை, சரணாகதி. இந்த ்ன்றும் இருந்தால் இழந்துபோன அனைத்தையும் மீட்டுத் தருவார். பாபா கைவிட்டுவிட்டார் என நினைத்து, நீங்கள் வேறு எங்கேனும் சென்றிருந்தாலும் உடனடியாகத் திரும்பி வந்துவிடுங்கள். வேறு நிவாரணம் பெற உங்களால் இயலாது.

யார் ஒருவர் சத்குருவை சரணடைகிறார்களோ, அவர்களுக்கு இவ்வுலக லாபங்களும், மேலுலக மேன்மைகளும் கிடைக்கின்றன என்பதை உறுதியாக அறிந்துகொண்டு சரணாகதி செய்யுங்கள். எப்போதெல்லாம் நம்பிக்கை தளர்வது போல இருக்கிறதோ அப்போதெல்லாம் நாம ஜெபம் செய்து வாருங்கள்.

உங்களை பாபா அறிந்திருக்கிறார் என்ற உண்மையில் தெளிவு கொண்டு, காத்திருந்தால் நிவாரணம் நிச்சயம். இந்த நிவாரணத்துடன் அவர் வேறு வேதனையை கூட்டமாட்டார். எதிலும் பொறுமை என்ற ஒன்றை மட்டும் கடைப் பிடித்தால் நம்பிக்கையும் சரணாகத உணர்வும் தாமாக வந்துவிடும். நீங்கள் ஜெயித்து விடுவீர்கள். விசுவாசம் உங்களை விடுவிக்கும்.

உங்கள் நம்பிக்கை உங்களைக் காத்துக்கொள்ளும். பதில் கிடைக்காத பிரார்த்தனை என எதுவும் இல்லை என்பதை உணருங்கள்.

பிரார்த்தனை

சமர்த்த சத்குருவே சாயி நாதப் பிரபுவே!

இதுவரை என்னுடைய பிரச்சினைகளை தீர்க்க வழி தெரியாமல் தவித்த நான், நிவாரணம் தேடி எவ்வளவோ இடங்களை சுற்றிவிட்டேன். இப்போது நீங்கள் என்னை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன்.

என்னுடைய இப்போதைய பிரச்சினை எப்படியிருந்தாலும், உங்கள் அருளால் அவை அனைத்தும் காணாமல் போய் விடும் என்பதை முழுமையாக நம்புகிறேன். உங்கள் மீது மாறாத விசுவாசம் வைத்துக் காத்திருக்கிறேன். எனது விசுவாசத்தை திடப்படுத்தி என்னை இந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்து காத்தருள்வீராக.

எனது நோய்கள், கடன்கள், பிரச்சினைகள், பிற தொல்லைகள் அனைத்தையும் விலக்கி என்னை உங்கள் அருள் காக்கட்டும்.

என்னிடம் நம்பிக்கை வை !

25129தினத்தியானம் 2

தைரியத்தை இழந்துவிடாதே! உன் மனத்தில் எந்தவிதமான கவலையும் வேண்டா. சுகமாகிவிடும். கவலையை விடு. பக்கீர் தயாளகுணம் உள்ளவர். உன்னை ரட்சிப்பார். வீட்டிற்குப் போய் அமைதியாக இரு.

வீட்டை விட்டு வெளியே எங்கும்போகாதே. தைரியமாக இரு, கவலையை விட்டொழி. என்னிடம் நம்பிக்கை வைப்பாயாக.

என்னிடம் நம்பிக்கை வை !

பாபா தனது பக்தர்களுக்கு வலியுறுத்திய முதல் விக்ஷயம் நம்பிக்கை. இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதும், சூரியன் உதயமாவதும், அஸ்தமிப்பதும் நம்பிக்கையினால்தான். நம்பிக்கையில்லாமல் வாழ்க்கைக் கிடையாது. நம்பிக்கை உள்ளவன் பாக்கியவான். அவன் இந்த ஜன்மத்திலேயே தான் விரும்பிய அனைத்தையும் பெற்றுக்கொள்வான்.

பாபாவின் அனுக்கத் தொண்டரான சாமாவின் சுண்டு விரலில் பாம்பு தீண்டிவிட்டது. விஷம் ஏறி, உயிரே போய்விடுவது ருந்தது. மாதவராவ் பீதியும் கவலையும் அடைந்தார். உறவினர்கள் பல உபாயங்களைக் கூறினார்கள். ஆனால், மாதவராவ் (சாமா) உறுதியுடன் சரண் அடைந்த போது, பாபா இந்தத் திருவாய் மொழிகளைக் கூறினார்.

சுண்டு விரல் அளவு பிரச்சினை

அன்றாட வாழ்வில் மிகப்பெரிய பிரச்சினைகள் அனைத்தும் சிறிய விக்ஷயங்கள் வடிவிலேயே நுழைகின்றன. கவனக்குறைவு, அலட்சியம், எதிர் பாராத நிலை, சந்தர்ப்ப வசம், விருப்பம், வெறுப்பு, கோபம், பொறாமை, அன்பு, நட்பு, காதல்,சச்சரவு, கோள் சொல்லுதல், வேடிக்கை என எந்த நிலையிலும் இந்தப் பிரச்சினைகள் நமது வாழ்க்கையினுள் நுழையக்கூடும்.

சின்ன விக்ஷயம்தானே, பார்த்துக்கொள்ளலாம் என்று எந்த ஒன்றையும் உடனே கவனிக்காவிட்டால் அதுவே பூதாகரமாக மாறிவிடும். சுண்டு விரலில் தீண்டினாலும் விக்ஷம் ஒட்டு மொத்த உடலை பாதிப்பதைப் போல, நம்மைத் தாக்குகிற எந்த ஒரு விக்ஷயமும் ஒட்டு மொத்த வாழ்வையும் வீணடித்து விடும். எனவே, எந்த நிலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரச்சினைகள் எப்படி வந்தாலும் உடனடியாகத் தீர்வு காணவேண்டும்.

கவலையும், பீதியும் கைமாற்றாக ஒருவர் கடன் கேட்கிறார். நாணயமானவர், திருப்பித் தந்துவிடுவார் என நம்புகிறீர்கள். கணவருக்குத் தெரியாமல் அல்லது மனைவிக்குத்தெரியாமல், சீக்கிரம் தந்துவிடுங்கள் எனக் கூறித் தருகிறீர்கள். இரண்டே நாள்களில் தந்துவிடுகிறேன் என வாங்குபவர், இரண்டு நாட்களுக்குள் தராவிட்டால் ஒருவித பயம் நம் மனதைத் தொற்றும். ஒருவாரம், ஒரு மாதமானால் கவலை மனதை ஆக்கிரமிக்கும்.

அடுத்த வாரம் ஒரு முக்கிய நிகழ்ச்சிக்குப் போக வேண்டிய நிலையிருக்கிறது. பணம் தேவைப்படும். வீட்டில் உள்ளவர் கேட்கப் போகிறார் என்ற நிர்ப்பந்தம் உருவாகப்போகிறது என வைத்துக்கொள்ளுங்கள். கவலை அதிகமாகி பீதி ஏற்படும்.

இது வீட்டில் கணவனுக்கோ, மனைவிக்கோ தெரிந்தால் தேவையில்லாத பிரச்சினைகளில் கொண்டு போய்விட்டுவிடும். பிறகு வாழ்க்கை சீரழியத்தொடங்கும்.

ஆரம்பத்திலேயே இல்லை எனக் கூறியிருக்கலாம், அவரைக் கேட்டுத் தருகிறேன் எனக் கூறி சமாளித்து இருக்கலாம். அப்படி செய்யாமல், வீட்டில் சும்மா இருப்பதுதானே! கொடுத்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்ற அலட்சியத்தால் இப்படி சிக்கிக் கொண்டோமே என வருந்துவோம்.

தன் ஆயுதத்தையும், தன் கையிலுள்ள பொருளையும் பிறர் கைக்குத் தருகிறவரை பேதை (அறியாமை உள்ளவர்) பதர் (எதற்கும் லாயக்கில்லாதவர்) என்று முன்னோர் கூறினார்கள்.

இது பணத்துக்கு மட்டுமல்ல, நமது ஏதோ ஒரு சறுக்கலுக்கும் பொருந்தும். இந்த நிலையில் என்ன செய்யலாம்?

அமைதியாக இரு:

முள் மீது போட்டுவிட்ட சீலையை மெதுவாக எடுக்கவேண்டும் என்பார்கள். அப்படியே நீங்கள் செய்த சிறு தவறின் பெரிய விளைவுகளை சீரமைக்க வேண்டுமானால், வீட்டுக்குப் போய் அமைதியாக இருக்கவேண்டும்.

வீடு என்பது மனது. குறிப்பிட்ட எல்லை. இந்த எல்லையை தாண்டி எதையும் கெடுத்துக்கொள்ள வேண்டா. உன்னையும் காயப்படுத்திக் கொள்ள வேண்டா. நிச்சயம் இதற்குத் தீர்வு உண்டு. எப்படி தீர்வு காண்பது என யோசித்துக்கொண்டிரு.

தைரியமாக இரு:

ஏமாற்றுகிறவன் ஏமாந்து போவான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பதை திடமாக நம்பு. மற்றவர்கள் கூறுகிற ஆலோசனைகளைப் புறம் தள்ளி, எப்படியும் வந்து விடும் எனத் திரும்பத் திரும்ப நினை. இந்த நினைவு மனதுக்கு தைரியத்தைக் கொடுக்கும்.

பாபா மீது நம்பிக்கை வை:

பக்கீர் தயாள குணம் உள்ளவர். அவர் நிச்சயம் நமது தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வார். எந்த நிலையிலும் கைவிடாமல், நம்மை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றுவார் என்பதை திடமாக நம்பு. உனது நம்பிக்கை வீண் போகாது. நிச்சயமாக பாபா உனது பிரச்சினையை களைந்துவிடுவார்.

பாபா களைந்துவிடுவார் என்பதற்காக நீ கண்டு கொள்ளாமல் இருந்துவிடக் கூடாது அல்லவா? சாமாவுக்குக் கூறியதைப் போல, இரவு முழுவதும் உறங்கக் கூடாது. அதாவது, பிரச்சினை தீரும் வரை முயற்சியை மேற்கொண்டு, தீர்வு காணவேண்டும். இதற்கு பாபா உதவி செய்வார்.

பிரார்த்தனை

சமர்த்த சத்குருவே!

என்னுடைய அலட்சியம் மற்றும் பிறர் தந்த நெருக்கடியால் நான் பிரச்சினையில் சிக்கிக்கொண்டேன். வெளியே இந்தப் பிரச்சினை தெரிந்தால் எனது வாழ்க்கை சீரழிந்துவிடவும், கேலிக்கு இடமாகவும் நேரிடலாம் என்ற பயத்தோடு இத்தனை நாட்கள் கவலையோடு வாழ்ந்துவிட்டேன்.

எங்களிடமிருந்து ஏமாற்றிப் பறித்துக் கொண்ட நபர்கள் அனைவரும், எங்கள் பணத்தையும், உடைமைகளையும் திருப்பித் தருமாறு அருள் செய்யுங்கள்.

பக்தர்களைக் காப்பவரும், பரம தயாளருமான தாங்கள் எனது பிரச்சினையிலிருந்து என்னைக் காத்தருளுங்கள். அலை பாயும் மனதை ஆட்கொண்டு, நிம்மதியை தாருங்கள். எனது மனம் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் எனது பிரச்சினையிலிருந்து என்னை மீட்டுக் காத்தருங்கள். உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையால், வேறு இடங்களை தேடி ஓடாமல் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். கருணை மிக்க சாயி மாதாவே! காத்தருளுங்கள்.