ஸ்ரீ சாயி பேராலயம்

கீரப்பாக்கத்தில் சுயம்புவான சாயி!
2e761-02-sai-baba-020409

கீரப்பாக்கத்தில் மலையடிவாரத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்தபோது, புற்றும் அருகே வேப்ப மரக்கன்றும் இருப்பது தெரியவந்தது. இந்த இடத்தினை பார்வையிட்ட கோபர்கான் சுவாமிகள், சுயம்புவாக எழுந்தருளி நாகசாயியாக பாபா ஏற்கனவே இந்த இடத்திற்க்கு வந்துவிட்டார். எனவே இந்த இடத்தில் சிறிய கோயில் அமைத்து, வேம்பின் அடியில் பாபா விக்ரகத்தையும் , புற்றின் இருபுறமும் ராகு கேது பிரதிஷ்டை செய்து வழிபட்டால், ராகு கேது தோஷம் விலகும் என்று அருளாசி வழங்கியிருக்கிறார். அதன்படியே ஆலயம் அமைக்கப்படவுள்ளது.

இந்த ஆலயத்தினை பெருங்களத்தூரின் முன்னாள் கவுன்சிலரும், அம்மன் தாசருமான நடராஜன் அவர்கள் கட்டித்தருகிறார்.

பாபா ஆலயம் தவிர, பக்தர்கள் தாங்கள் உபாசிக்கும் தெய்வத்திற்க்கான ஆலயங்களையும் இங்கே உருவாக்கித்தர முன்வந்திருக்கிறார்கள்

இந்த இடத்திற்க்கு காசிலி சுவாமியான அனந்த தீர்த்த மகராஜ் எழுந்தருளிச் சென்றதற்க்கு அடையாளமாக, காசிலி சுவாமி கோயில் என்ற கோயில் ஒன்றும் இங்கு அமைக்கப்படுகிறது. இதனை அனுமனுக்குப் பின்புறம் அமைத்திட காசிலி சுவாமி தெரிவித்தமைக்கு இணங்க அவ்வாறே அமைக்கப்படவுள்ளது.

கீரப்பாக்கத்தில் உருவாகவுள்ள கோயிலில் அமையவுள்ள இன்னும் பல விபரங்கள் தொடர்ந்து இங்கு வெளியிடப்படும். அவசியம் ஒருமுறை கோயில் அமையவுள்ள இடத்திற்க்கு வருகை தாருங்கள்.

Leave a comment