குருவை நினை

 எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது. இந்த நெறியை, பிரத்யக்ஷமான அனுபவத்தை அளித்து, அவரவர் குருவின்மீது அவரவருக்கு உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஸாயீ திடப்படுத்தினார். 

      பாதங்களில் பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தையளித்தார். சிலருக்கு ஒரு வழி; சிலருக்கு வேறுவழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின்மீது உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் திடப்படுத்தினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

ராம்லால்

பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்குக் கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது. 
ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை. 
உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண் டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம். 
ராம்லாலி­ன் கனவோ விசித்திரமானது. அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், ”என்னைப் பார்க்க வாரும்.
கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்குத் தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். 
அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னவென்று தெரியும்.
அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். 
      கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். 
நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களைக் கவனமாகப் பார்த்தபின், ”இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று கடைக்காரரை விசாரித்தார். இது ஷீரடியில் இருக்கும் ஸாயீ என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார். 
மற்ற விவரங்களைப் பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷீரடிக்குச் சென்றார். பாபா மஹாஸமாதி அடையும்வரை அவருடன் இருந்தார். 
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது. 
அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர். 
கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான ஸாது என்றறிக. 
      ‘எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு என்பதே ஒரு ஸாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை. 
     சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன்மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவிலேயே மூழ்க வேண்டுமென்று ஸாயீ விரும்புகிறார். 
    அதனால்தான் பக்தர்கள் ஸாயீ சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன். 

 கேட்பவர்களின் மனத்தில் சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தி­ருந்து விடுபடுவார்கள். ஸாயீ பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலை பெறுவார்கள். 

ஒரு தந்தையைப் போல பாபா என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றினார்!

எனக்கு நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவத்தின் மூலம், அன்பான ஒரு தாய் தந்தையைப் போல பாபா எப்போதும் என்கூடவே இருந்து இக்கட்டான நேரத்தில் காப்பாற்றி ஆசி அளிக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.
[புது தில்லி] ரஜௌரி கார்டனுக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, ராணி பாக் எனும் இடத்திற்கு ஆட்டோவில் செல்வது என் வழக்கம். புது இடம் என்பதால் முதலில் பயமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிட்டது. செல்லும் வழியெல்லாம் நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன். ஸாயி என்னுடனேயே இருப்பதுபோல ஒரு தைரியத்தை இது அளித்தது.
வழக்கமாக இந்த இடத்திற்குச் செல்ல ஆட்டோக்காரர் 50 ரூபாய்கள் கேட்பார். மீட்டர் எல்லாம் போடமாட்டார். ஆனால், அன்று நான் ஏறிய ஆட்டோக்காரரோ மீட்டரைப் போட்டுவிட்டார். அவருக்குக் கொடுப்பதற்கான பணத்தை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்லலாம் என எனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தேன். நான் எடுத்து வந்ததாக நினைத்த தொகையை விடவும் அது குறைவாகவே இருப்பதை உணர்ந்தேன். ரயில் பயணத்துக்கான கட்டணத்தைத் தவிர அதிகப்படியாக வழக்கமாக அவர்கள் கேட்கும் 50 ரூபாய்கள் இருக்காது எனப் பட்டது. என்ன செய்வதெனத் தெரியாம‌ல், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். எனக்கு நம்பிக்கை ஊட்டுவதுபோல, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று ஆட்டோக்கள் பாபாவின் படம், உபதேசம் ஆகியவற்றைத் தாங்கி என்னைக் கடந்து சென்றன. இது என‌க்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ரயில் நிலையத்துக்கு சற்று முன்னதாகவே, மீட்டர் 42 ரூபாய் எனக் காட்டியபோது, ஆட்டோவை நிறுத்தி, இறங்கி ஆட்டோக்காரரிடம் அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு நடக்கலானேன். மீதி கையில் இருந்த பணம் எனது மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்குப் போதுமானதாக இருந்தது. 20 அடி தூரமே ரயில் நிலையத்துக்கு இருக்கும்போது, அவ்வாறு நான் நிறுத்தி நடப்பதைக் கண்டு ஆட்டோக்காரரே வியந்தார்.
இதில் பாபாவின் லீலை என்னவென்றால், வழக்கம்போல நான் மீட்டர் இல்லாத வாகனத்தில் ஏறியிருந்தால், அவர்கள் கேட்கும் அந்த 50 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, எனக்கு வீடு திரும்ப, ரயில் பயணம் செல்லும் கட்டணம் இல்லாது போயிருக்கும். அன்றைக்கெனப் பார்த்து, மீட்டர் பொருத்திய ஆட்டோவில் என்னை அழைத்துச் சென்று பாபா என்னை அந்த இக்கட்டான நிலையிலிருந்து [பழக்கமில்லாத இடத்தில் நான் அலைந்து விடாமல்] காப்பாற்றினார். தில்லி இன்னும் எனக்கு அதிகப் பழக்கமில்லாத ஊர் என்பதால் பாபா இவ்விதம் அருள் செய்தார்.

ஜெய் ஸாயி ராம்.

குசால்பாவு

விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை. 
இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், ஷீரடி சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் ஸித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.  இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள். 

      ஒரு நாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ”குதிரை வண்டியில் ராஹாதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.

 ”அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே வரச் சொல்கிறார் என்று அவரிடம் சொல்லும்.
பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாவுவைச் சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தார். 
பாபாவின் செய்தியைக் கேட்ட குசால்பாவு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், நான் இப்பொழுதுதான் தூக்கத்தி­ருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார். மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாகப் படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார்.
அவர் என்னிடம் சொன்னார்,  உடனே கிளம்பி ஷீரடிக்கு வாரும் என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே என் மகனிடம் இச் செய்தியைச் சொல்லியனுப்பினேன்.
 ”ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது. தீக்ஷிதர் கேலி­யாகச் சொன்னார், ”ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்.
 ”நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷீரடிக்கு வந்தார். 

 தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். 

சாந்தம் அடை!

 அக்கினியின்மீதும் அவருக்கு அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இதுவிஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன் கேளுங்கள். செவிமடுப்பவர்களே! அது பாபாவினுடைய அபூர்வமான சக்தியை விளக்கும். 
     ஒருநாள் நடுப்பகல்வேளையில் துனியின் தீ பலமாக எழும்பியது. அந்நேரத்தில் துனிக்குப் பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? ஜுவாலைகள் திகுதிகுவென்று உயரமாக எரிந்தன. 
      தீ பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாகக் கிளம்பிக் கூரையின் மரப்பலகைகளைத் தொட்டன. தீவிபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகிவிடும் போலத் தோன்றியதுõ 
      பாபா என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால் பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், ”ஐயோ, எவ்வளவு அமைதியாகவும் படபடப்பின்றியும் இருக்கிறார்”.
      யாரோ ஒருவர் அலறினார், ”ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவாருங்கள்!’ மற்றவர் சொன்னார், ”யார் அதைத் துனியில் கொட்டுவது? கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி) பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார்?”.
     எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்; ஆனால் யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே தாமிருந்த நிலையி­ருந்து சிறிது நெளிந்து ஸட்காவின்மீது கரத்தை வைத்தார். 
      கொழுந்துவிட்டெரியும் தீயைப் பார்த்துக்கொண்டே ஸட்காவைக் கையிலெடுத்துக்கொண்டு, ”நகரு, பின்வாங்கு, போஎன்று சொல்லி­க்கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.
     துனியி­ருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை ஸட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்துப் பார்த்துக்கொண்டும், ”சாந்தம் அடை; சாந்தம் அடை என்று திரும்பத் திரும்பச் சொன்னார். 
      ஒவ்வொரு அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின்வாங்கியது. படிப்படியாக துனி சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்துபோயிற்று. 
      ஞானிகளில் சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான ஸாயீ இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில் சரணடைந்தால், தம் கிருபைசெய்யும் கரத்தை உம்முடைய சிரத்தின்மீது வைப்பார். 
     எவர் இந்த அத்தியாயத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் நித்தியபாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான மனநிலையையும் ஆபத்துகளி­ருந்து முழு விடுதலையையும் அனுபவிப்பார். 
     நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன்? மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன், விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன் வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள். 

      உங்களுடைய அபூர்வமான இச்சைகளுங்கூடப் பூர்த்திசெய்யப்படும். 


கடைசியில் நீங்கள் நிஷ்காமமானவராக (எதையும் வேண்டாதவராக) 

ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய (எளிதில் கிடைக்காத) 

ஸாயுஜ்ய முக்திநிலையை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) அடைவீர்கள். 

அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். 


     இக்காரணம்பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் 

இந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யவேண்டும். 


     அம்மாதிரியான பாராயணம் சித்தத்தைத் தூய்மைப்படுத்தி ஆன்மீக 

நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் 

விரட்டியடிக்கப்படும்; விரும்பினவும் நன்மைகளும் விளையும். 

பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் (அம்மாதிரியான 

பாராயணத்தால்) அனுபவிக்கலாம்.

ஸ்ரீ சாசாயி சத்சரித்திலிருந்து

காகாஜி வைத்யா

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.  இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாகக் கேட்டுக்கொண்டுவந்தால், ஸாயீலீலை ரசவாதம் புரியும். பிறவியெனும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். ஸமர்த்த ஸாயீ மஹத்தான சக்தி பெற்றவர் அல்லரோ.
நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்துவந்தார். அங்கிருந்த தேவியின் கோயில் பூஜை செய்பவராக இருந்தார். 
தேவியின் பெயர் ஸப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளாலும் வேதனைகளாலும் துன்புற்ற பூஜாரி  மன உளைச்சலுற்றார். காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை. 
மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளி­ருந்தும் சஞ்சலங்களி­ருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார். 
    தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித் திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்களே!  இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!
 தேவி ஸப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, ”பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும் என்று கூறினார்.
 யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது? என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார். 
மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார். 
 பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவர் ஆகத்தான்  இருக்கவேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனவுளைச்சல் நிற்கவில்லை. 
திரியம்பகேசுவரத்தில் பத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை. 
  உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார். 
 தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவ­லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும் மனம் அமைதியற்று இருந்தது. 
 மறுபடியும் தேவியின் கோயிலுக்குச் சென்று, ”என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனத்திற்கு அமைதி கொடுங்கள். என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டாம் என்று மனமுருகி வேண்டினார். 
      தீனமான குர­ல் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினார். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி, ”பாபா என்று நான் குறிப்பிட்டது ஷீரடியில் வாழும் ஸமர்த்த ஸாயீயை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே? எனச் சொல்­ அருள் செய்தார். 

      இந்த ஷீரடி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீரடி விஜயம் எப்படி நடக்கப் போகிறதென்றும் தெரியவில்லையே? என்று காகாஜி குழம்பினார். 
     ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமல்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார். 
     ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசம் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளும் இறைவனும் அத்வைதம். 

 ”என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன். இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையுமாகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை. 
  ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்லமுடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.  பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்யவேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பாவமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது. 
இவ்விதமாகக் காகாஜி, ‘ஷீரடி தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்?என்று மூளையைக் குழப்பிக்கொண் டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு ஷீரடியி­ருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்.
    விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? , இல்லவேயில்லை. எவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்õ   அவருடைய பெயர் மாதவராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது. 
      சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அன்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் (நீ, வா, போஃ என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்துசேர்ந்த விருந்தாளி இவர்தான். 
குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், ”இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு. குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன். இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயி­ருந்து விடுபட்டது. 
     வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன் நிறைவேற்றப்படாமல் கிடக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்குக் காரணம் ஆகிறது. 
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார்.
  ”பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா.
தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வலி­யையும் துன்பத்தையும் அளித்தன. 
 ”தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வ­லியையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சன்னிதியில் ஆரத்திபோல் சுற்றியபின் பாதங்களில் ஸமர்ப்பிக்கிறேன்.
   செய்யலாம், செய்யலாம் என்று சொல்­ இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது. 
    தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, ‘நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களி­ருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார். 
மறுபடியும், ‘போவோம், போவோம் என்று சொல்லி­யே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவராவ் மறந்தே போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.
 30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷீரடிக்கு வந்துசேர்ந்தார்.  ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண் டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும்பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார். 
ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி­ எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச்செய்து மதிப்புப் பெற்றிருந்தார். 
மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தைப்பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார். 
ஜோதிடர் கூறினார், ”உமது தாயார் மரணத் தறுவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்கச் சொன்னார். ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள். மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார். 
      மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார். 
பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, ”என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள் என்று வேண்டினார்.
 ”நீரே எனது ஸப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்குக் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்.
பாபா பதில் கூறினார், ”நீ ஸப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவிக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே ஸமர்ப்பணம் செய்.
பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்குப் போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்குத் திரும்பினார். 
பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் உதீ பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார். 
      ஸப்தசிருங்கிக்கு வந்துசேர்ந்து, குல உபாத்தியாயருக்காகத் தேடினார். தெய்வாதீனமாகக் காகாஜியின் வீட்டை அனாயாசமாகச் சென்றடைந்தார். 
      காகாஜியோ இங்கு பாபா தரிசனத்திற்காகத் துடித்துக்கொண் டிருக்கிறார். அதே சமயத்தில் மாதவராவும் அங்கு வந்துசேர்கிறார். இது சாமானியமாக நடக்கக்கூடிய சம்பவமா என்ன? 
காகாஜி அவரை யார் என்றும் எங்கிருந்து வந்திருக்கிறாரென்றும் விசாரித்தார். மாதவராவ் ஷீரடியி­ருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் காகாஜி அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். போற்றத்தக்க இந்த சம்பவக் கூடலைக் கண்டு இருவரும் துள்ளிக் குதித்தனர். 
 இவ்வாறாக, இருவரும் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன் ஸாயீ லீலையைப் புகழ்ந்து கொண்டே நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகளை முடித்தனர். அது முடிந்ததும் உபாத்தியாயர் (காகாஜி) ஷீரடிக்குக் கிளம்பினார். 
மாதவராவின் மதிப்பிற்குரிய சங்கமும் தோழமையும் கிடைக்குமென்று கனவிலும் எதிர்பாராத காகாஜி ஆனந்தத்தால் நிரம்பினார். அவருடைய கவனம் முழுவதும் ஷீரடி செல்லும் பாதைக்குத் திரும்பியது. 
நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகள் முடிந்தவுடன், ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியவர்களாய் இருவரும் சீக்கிரமாக ஷீரடிக்குக் கிளம்பினர். 
    அவர்கள் கிளம்பிய வேகம், காகாஜியின் மனத்தில் முன்னமிருந்த ஆவலையும் துடிப்பையும் ஒத்திருந்தது. கோதாவரிக் கரையை சீக்கிரமாகச் சென்றடைந்தனர். அங்கிருந்து ஷீரடி சமீபத்தில் இருந்தது. 
காகாஜி பாபாவை வணங்கி அவருடைய பாதங்களைத் தம் கண்ணீரால் குளிப்பாட்டினார். பாபாவின் தரிசனத்தால் சாந்தியையும் மகிழ்ச்சியையும் திரும்பப்பெற்றார். 
இதற்காகத்தான் தேவி அவருடைய கனவில் தோன்றினாள். ஸமர்த்த ஸாயீயைக் கண்டவுடனே காகாஜி உண்மையான சந்தோஷமடைந்தார். அவருடைய மனோரதம் நிறைவேறியது. 
ஸாயீ தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. பாபாவின் அருள் அவர்மீது பொழிந்தவுடன் மனம் நிச்சிந்தையாகியது; கவலைகள் பறந்தோடின. 
வியப்புறும் வகையில் மனத்தின் சஞ்சலங்கள் ஓய்ந்தன. அவர் தமக்குத் தாமே, ‘ஓ இதென்ன அசாதாரணமான லீலை என்று சொல்லி­க்கொண்டார். 
      ”என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; ஒரு கேள்வியும் கேட்கவில்லை; சமாதானமும் செய்யவில்லை; ஆசீர்வாதமும் செய்யவில்லை; வெறும் தரிசனமே எனக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அளித்துவிட்டது”.
சஞ்சலங்களால் அலைபாய்ந்துகொண் டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மஹிமையே அன்றி வேறெதுவும் இல்லை.
ஸாயீ பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது. 
    உபாத்தியாயர் (காகாஜி) பாவத்துடன் ஸாயீயின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார். 

இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் ஷீரடியில் தங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, ஸப்தசிருங்கிக்குத் திரும்பினார்.