சாலி கிராமத்தில் மிகப்பெரிய பல்லக்கு ஊர்வலம்!

e5aba-img_0554

சென்னை சாலிகிராமம் பார்வதி பவன் ஓட்டல் நிர்வாகத்தின் சார்பில் அதன் உரிமையாளர் தோத்தாத்திரி ஏற்பாடு செய்திருந்த பிரும்மாண்டமான பல்லக்கு ஊர்வலத்தை சாயி வரதராஜன் துவங்கிவைத்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பல்லக்கை சுமந்து வந்தார்கள்.

முன்னதாக சாலி கிராம சாயி பாபா பிரார்த்தனை மைய நிறுவனர்கள் இந்த பல்லக்கு ஊர்வலத்தை ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தனர்.

சாலிகிராமம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையத்திலிருந்து, தொடங்கிய பிரும்மாண்டமான பல்லக்கு ஊர்வலம் சாலி கிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 3 வது தெரு, துரை அரசன் தெரு, குசலாம்பாள் தெரு, அருணாசலம் சாலை ஆகிய வழியாகப் புறப்பட்டு, பார்வதி பவன் செந்தூர் முருகன் ஹாலை அடைந்தது. பாபாவுக்கு ஆரத்தி, பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்ன தானமும் நடைபெற்றது.

Leave a comment